×

எடப்பாடி கூட்டிய பொதுக்குழு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது- ஓஎஸ் மணியன்

 

எடப்பாடி கூட்டிய பொதுக்குழு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது- ஓஎஸ் மணியன்எடப்பாடி கூட்டிய பொதுக்குழு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது- ஓஎஸ் மணியன்அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினராக ஓஎஸ் மணியனை அமைப்பு செயலாளராக அறிவித்துள்ளார்.

அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎஸ்.மணியன் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் அதிமுக அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார். அங்கு ஏராளமான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்ததை தொடர்ந்து, அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதனை தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் ஓஎஸ்.மணியன். “எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என வைத்திலிங்கம் விமர்சித்தது பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போல உள்ளது. ஓபிஎஸ் 22 பேரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. அதிமுகவின் சட்ட விதிகளின்படி  வளர்ச்சி பாதைக்கு எடப்பாடி பழனிச்சாமி கொண்டு செல்கிறார். எடப்பாடி கூட்டிய பொதுக்குழு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எந்த சூழ்நிலையிலும் தடம் மாறாதவர்கள். 1973 முதல் அதிமுக என்றுமே வளர்ச்சிப்பாதையில்தான்  செல்கிறது” எனக் கூறினார்.

இதனிடையே நாகை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர் செல்வம், ஓஎஸ்.மணியன் ஆகியோர் புகைப்படங்களில் ஒ.பன்னீர்செல்வம் புகைப்படம் அகற்றப்பட்டது.