×

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த 9 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,091பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,586ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் இன்று ஒரே நாளில் பலியாகியுள்ளார்கள். இதில் 3 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் என்றும் 6 பேர்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,091பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,586ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் இன்று ஒரே நாளில் பலியாகியுள்ளார்கள். இதில் 3 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் என்றும் 6 பேர் கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர்களின் உடல் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவு வந்த பிறகே அவர்களின் இறப்புக்கு கொரோனா காரணமா? என்பது தெரியவரும்.