×

கனமழை- இந்த மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

 

தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நாளை 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்துவாங்குகிறது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டையில் அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், காலை சுமார் 10-மணி அளவில் மழை பெய்யத் தொடங்கிய மழை, பின்னர் கனமழையாக உருவெடுத்தது. சென்னையிலும் பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது.

தொடர் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், திருச்சி, தேனி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை(26.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதேபோல் மதுரை, திருவாரூர், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.