×

விஷம் வைத்து 6,000 கோழிகள் கொலை! முன்பகையால் நடந்த பயங்கரம்!

முன்விரோதத்தால் 6 ஆயிரம் கோழிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் வசிப்பவர் ராஜன். இவர் கோழி பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கோழிப்பண்ணையில் இருந்த கோழிகள் திடீரென இறந்து கிடந்தன. சுமார் 6 ஆயிரம் கோழிகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜன், கதறி அழுதுள்ளார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாஜன் என்பவருக்கும் முன்பகை இருந்ததால் அவர் தான் தனது கோழிகளை கொன்றுவிட்டதாக ராஜன், போலீசில்
 

முன்விரோதத்தால் 6 ஆயிரம் கோழிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் வசிப்பவர் ராஜன். இவர் கோழி பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கோழிப்பண்ணையில் இருந்த கோழிகள் திடீரென இறந்து கிடந்தன. சுமார் 6 ஆயிரம் கோழிகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜன், கதறி அழுதுள்ளார்.

அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாஜன் என்பவருக்கும் முன்பகை இருந்ததால் அவர் தான் தனது கோழிகளை கொன்றுவிட்டதாக ராஜன், போலீசில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து ராஜன் பண்ணை கோழிகளை விஷம் வைத்து கொன்றதாக அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், சாஜனை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்பகையால் 6,000 கோழிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.