விஷசாராயம் அருந்தி 6 பெண்கள் பலி- குஷ்பு தலைமையில் விசாரணை குழு அமைப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் சேஷசமுத்திரம் மற்றும் மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 60 நபர்கள் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்து வரும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனயில் 111 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி் ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்களாவார். விஷ சாராய சம்பவத்தில் இதுவரை 22 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.