×

மதுரையில் கல்லூரி மாணவியின் தந்தையை தாக்கிய 6 பேர் கைது

 

மதுரை அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரைச் சேர்ந்த செந்தில்பாண்டியன் என்பவர் மகள் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மீனாட்சி கலை கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் (3/11/22) செவ்வாய்க்கிழமை மாலை தன் மகளை கல்லூரி முடிந்து அழைத்து வருவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து வந்த அமரர் ஊர்தி முன் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் ஒலி எழுப்பியவரே மதுபோதையில் சென்றுள்ளனர்.