×

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பட்டதாரிக்கு 10 ஆண்டுகள் சிறை !

இவர் வீட்டின் அருகே இருந்த 5 வயது சிறுமியைக் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடலூர் மாவட்டம் பெரிய கொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி குமரேசன். இவர் வீட்டின் அருகே இருந்த 5 வயது சிறுமியைக் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர்
 

இவர் வீட்டின் அருகே இருந்த 5 வயது சிறுமியைக் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பெரிய கொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி குமரேசன். இவர் வீட்டின் அருகே இருந்த 5 வயது சிறுமியைக் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அதனையடுத்து, அந்த வழக்கை விசாரித்த கடலூர் மகிளா நீதிமன்றம் குழந்தையின் மருத்துவ பரிசோதனை மற்றும் சாட்சியங்களை ஒப்படைக்கும் படி உத்தரவிட்டிருந்தது. அதன் படி, குழந்தையின் மருத்துவ பரிசோதனை மற்றும் சாட்சியங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் மூலம், குமரேசன் தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், குமரேசனுக்கு 10 ஆண்டுகள் சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.