×

32 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைசெய்த 5 சிறுவர்கள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் 32 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் திருமணமாகி குழந்தைக்கு தாயாக இருந்துள்ளார். இவர் உணவு சமைப்பதற்காக காட்டுப்பகுதியில் விறகு எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 6 பேர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். அதில் தன்னை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றும் அதை
 

உத்தரபிரதேச மாநிலத்தில் 32 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் திருமணமாகி குழந்தைக்கு தாயாக இருந்துள்ளார். இவர் உணவு சமைப்பதற்காக காட்டுப்பகுதியில் விறகு எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 6 பேர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். அதில் தன்னை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றும் அதை 6வதாக ஒரு நபர் வீடியோ எடுத்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் 5 பேர் சிறுவர்கள் என்றும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

இதுகுறித்து வெளியில் சொன்னால் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் தனது கணவன் மற்றும் குழந்தையை கொலை செய்து விடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியதாகவும் அப்பெண் அப்புகாரில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.