×

தமிழ்நாடு முழுவதும் 48 சப்-கலெக்டர்கள் அதிரடி மாற்றம்..!!

 

தமிழகத்தில் சப்-கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் மண்டல/மாவட்ட மேலாளர்கள் அந்தஸ்தில் உள்ள 25 அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் சப்-கலெக்டர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மற்றும் அதே அந்தஸ்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை, மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

ரேணுகா, மாவட்ட மேலாளர் டாஸ்மாக் திருவள்ளூர் கிழக்கு-நில எடுப்பு துறை தகுதி வாய்ப்பு அதிகாரி திருவள்ளூர், தமிழ்மணி, மாவட்ட மேலாளர் டாஸ்மாக் தஞ்சாவூர்- ஆர்.டி.ஓ. திருச்சி, தீப சித்ரா, மாவட்ட மேலாளர் டாஸ்மாக் நீலகிரி- தனித் துறை ஆட்சியர் நீலகிரி, முத்துகிருஷ்ணன் மாவட்ட மேலாளர் பெரம்பலூர்-தனித்துணை ஆட்சியர் மயிலாடுதுறை, ஜோதி சங்கர், மாவட்ட மேலாளர் டாஸ்மாக் கோவை- துணை தாசில்தார் நில எடுப்பு, விழுப்புரம், சீனிவாசன், பொது மேலாளர் டாஸ்மாக், கோவை-மாவட்ட வளங்கள் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சுரேஷ் கண்ணன், மாவட்ட மேலாளர் டாஸ்மாக் சிவகங்கை-தனித் துறை ஆட்சியர் மதுரை, பிரபு வெங்கடேசன், மாவட்ட மேலாளர் டர்ஸமாக் சென்னை தெற்கு-மாவட்ட ஆத திராவிட மற்றும் பழங்குடி நல வாரிய மயிலாடுதுறை, ரமேஷ், மாவட்ட மேலாளர் டாஸ்மாக் மதுரை வடக்கு-மண்டல மேலாளர் சிவில் சப்ளை சேலம், ஆனந்தி,துணை ஆட்சியர் சிறப்பு பறக்கும் படை சென்னை-தனித்துறை ஆட்சியர் நெல்லை, ராஜகோபால், மாவட்ட மேலாளர் டாஸ்மாக் திருப்பூர்-தனித்துறை ஆட்சியர் கரூர் உள்பட பலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.