வெடித்து சிதறிய கல்குவாரி - 4 பேர் உயிரிழப்பு
May 1, 2024, 11:33 IST
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது வெடிமருந்துகள் வெடித்து சிதறின. வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலியாகினர். 2 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது.