×

அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதியதில் 4 பேர் உடல் நசுங்கி பலி

 

பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

ஒசூர் அடுத்த பேரண்டப் பள்ளி அருகே சாணமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு வாகனம் பின் தொடர்ந்து வந்த கார் அதனை தொடர்ந்து பிக்கப் வேன் அதனை தொடர்ந்து மற்றொரு கார் பின்னால் வந்த மற்றொரு லாரி மோதி விபத்தில் காரில் பயணித்த வாலிபர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திலே பலியாகினர் விசாரணையில் மணிவன்னன் என்பவர் கனடா நாட்டில் இருந்து பெங்களூர் வந்துள்ளாதாக தெரிகிறது. பெங்களூரில் இருந்து அழைத்துச் வர செல்ல சேலத்தைச் சேர்ந்த முகிலன் மற்றும் நண்பர்கள் சென்று அழைத்து வரும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதால் காரில் பயணித்த நான்கு பேருமே பலியாகி உள்ளனர் இடிபாடுகளில் சிக்கிய உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது உடனடியாக போலீசார் அடிபட்ட வாகனங்களை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.