×

39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணை செயலாளராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மாநில மனித உரிமை ஆணைய செயலாளராகவும் கரூர் ஆட்சியராக இருந்த பிரசாந்த் மு வடநேரே நிதித்துறை கூடுதல் செயலாளராகவும் திருவாரூர் ஆட்சியர் சாந்தா நிர்வாக கூடுதல் ஆணையராகவும் திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி மீன்வளம் மற்றும் பால்வளத் துறை இணைச் செயலராகவும்
 

தமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணை செயலாளராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மாநில மனித உரிமை ஆணைய செயலாளராகவும் கரூர் ஆட்சியராக இருந்த பிரசாந்த் மு வடநேரே நிதித்துறை கூடுதல் செயலாளராகவும் திருவாரூர் ஆட்சியர் சாந்தா நிர்வாக கூடுதல் ஆணையராகவும் திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி மீன்வளம் மற்றும் பால்வளத் துறை இணைச் செயலராகவும் ஈரோடு ஆட்சியர் கதிரவன் சேலம் நிறுவன மேலாண் இயக்குனராகவும் பதிவுத்துறை ஐஜி சங்கர் தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய சிஇஓ- ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், நாகை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.