×

’32 பவுன் பத்தல…3 லட்சம் வேணும்’…சம்மதம் தெரிவிக்காத மருமகள்; மாமியார் வீட்டார் சேர்ந்து செய்த கொடுமை!

மாமியார் குமாரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சத்யா கணவருடன் மொரப்பூரில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். தர்மபுரி மாவட்டம் மாரியம்பட்டியை சேர்ந்தவர் சத்யா. சித்தேரியில் உள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியையாக உள்ள இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் அதியமான் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 32 சவரன் நகைகள், 1 லட்சம் ரொக்கம், டிவி, பிரிட்ஜ் என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமண வாழ்க்கை
 

மாமியார் குமாரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சத்யா கணவருடன் மொரப்பூரில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். 

தர்மபுரி மாவட்டம் மாரியம்பட்டியை சேர்ந்தவர் சத்யா. சித்தேரியில் உள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியையாக உள்ள இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் அதியமான் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 32 சவரன் நகைகள், 1 லட்சம் ரொக்கம், டிவி, பிரிட்ஜ் என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமண வாழ்க்கை  6 மாத  காலம் சந்தோஷமாகச் சென்ற நிலையில், சத்யாவுக்கும் மாமியார் குமாரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சத்யா கணவருடன் மொரப்பூரில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். 

இந்நிலையில் மீண்டும் வரதட்சணையாக மூன்று லட்சம் ரூபாய் கேட்ட கணவரும், கணவரின் குடும்பத்தாரும்  சத்யாவை அடித்து துன்புறுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அதியமானுக்கு  கடந்த 6 ஆம் தேதி   பந்தாரஹள்ளியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து சத்யா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் அதியமான், மாமியார் குமாரி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணைக்காக  ஆசிரியர் ஒருவர் 2 வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.