×

30 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,982பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,342பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 30 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அம்மருத்துவமனையின் முதல்வர், கொரோனா தொற்று ஏற்பட்ட 4500-க்கும்
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,982பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,342பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 30 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அம்மருத்துவமனையின் முதல்வர், கொரோனா தொற்று ஏற்பட்ட 4500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளித்துள்ளது எங்கள் மருத்துவமனை. இதுவரை இந்த பணிகளில் ஈடுபட்ட எங்களின் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், பணியாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் கடந்த 2 நாட்களில் 30 மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் யாருக்கும் அறிகுறிகள் இல்லை. நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர். களப்பணியில் ஈடுப்படுவோருக்கு அதிகமாக தொற்று ஏற்படும் நிலையில் நோயாளிகளின் அருகில் இருந்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படும். ஆனால் அது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே உள்ளது” என்றார்.