×

மின் வேலியில் சிக்கி 3 பேர் பலி  - விழுப்புரத்தில் சோகம்!!

 

விழுப்புரம் அருகே மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வன்னிபேர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகதாஸ், வெங்கடேசன், மற்றும் சுப்பிரமணி,  இவர்கள் மூவரும் தினசரி  வேட்டைக்கு செல்வது வழக்கம்.  அதன்படி மூன்று பேரும் நேற்று இரவு வேட்டைக்கு சென்றுள்ளனர்.அதன்படி நேற்றிரவு மூவரும் வேட்டைக்கு சென்றுள்ளனர்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி பத்மநாபன் என்பவர் தனது நிலத்தை சுற்றி மின்வேலியை அமைத்துள்ளார்.  காட்டு பன்றிகளை விரட்டுவதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.  இதை கவனிக்காத முருகதாஸ், வெங்கடேசன் மற்றும் சுப்பிரமணி மூவரும் பத்மநாபன் நிலத்தை கடக்கும் போது மின்வேலியில் சிக்கியுள்ளனர்.

இதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பிரம்மதேசம் போலீசார் உயிரிழந்த மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் அனுமதியின்றி மின்வேலி அமைத்து பத்மநாபன் தேடி வருகின்றனர். மின்வேலியில் சிக்கி  மூவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.