×

பிரபல நடிகையின் மகன் கொரோனாவுக்கு பலி

பிரபல நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கவிதாவின் கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். ஐதராபாத்தை சேர்ந்தவர் கவிதா. தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார் கவிதா. 1976ல் ‘ஓ மஞ்சு’படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் அமராவதி, ஆட்டுக்கார அலமேலு, நாடோடித் தென்றல், காற்றினிலே வரும் கீதம், அல்லி தர்பார், வைதேகி கல்யாணம், செந்தமிழ்
 

பிரபல நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கவிதாவின் கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் கவிதா. தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார் கவிதா.

1976ல் ‘ஓ மஞ்சு’படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் அமராவதி, ஆட்டுக்கார அலமேலு, நாடோடித் தென்றல், காற்றினிலே வரும் கீதம், அல்லி தர்பார், வைதேகி கல்யாணம், செந்தமிழ் பாட்டு, நட்சத்திர நாயகன் உள்ளிட்ட ஏராளமான உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கவிதா தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

கொரோனா இரண்டாவது அலையில் கவிதாவின் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் இருவருக்கும் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் மகன் சாய் ரூப். கனவர் தசரத ராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மகனின் இழப்பை தாங்க முடியாமல் கண்ணீர்விடும் கவிதாவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.