×

சொத்துக்களை முடக்குவோம்; பத்திரிகையில் வெளியிடுவோம் என மிரட்டல்: முதல்வருக்கு சரத்குமார் அவசர வேண்டுகோள்

இந்த மாதம் முதல் 6 மாதங்களுக்கு வங்கிக்கடன் தவணை திரும்பி செலுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக அழுத்த கொடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தி இருக்கிறார். கொரோனாவால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அமல்படுத்தி இருக்கக்கூடிய ஊரடங்கு மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் தொழில் இல்லாமல் வணிகம் இல்லாமல் வியாபாரம் இல்லாமல் மக்கள்
 

இந்த மாதம் முதல் 6 மாதங்களுக்கு வங்கிக்கடன் தவணை திரும்பி செலுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக அழுத்த கொடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தி இருக்கிறார்.

கொரோனாவால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அமல்படுத்தி இருக்கக்கூடிய ஊரடங்கு மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் தொழில் இல்லாமல் வணிகம் இல்லாமல் வியாபாரம் இல்லாமல் மக்கள் வேதனையில் உழன்று வாடும் உணர்வை புரிந்து இருப்பார்கள் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் சரத்குமார்.

வேலைவாய்ப்பு இல்லாமல், வருமானம் இல்லாமல் மக்களின் வாழ்வாதாரம் வீட்டுக்கடன், தனி கடன், வாகன கடன், நகைக் கடன் என பலவிதமான கடனில் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். பொருளாதாரத்தை முன்னேற்ற நாளைய தினமே ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில்கள் துவங்கினாலும் நசிந்து போன தொழிலை ஒரே நாளில் மீட்டெடுப்பது சாத்தியமான விஷயம் அல்ல. அனைத்து சூழல்களிலும் சிக்கல்களையும் சவால்களையும் கடந்து நூறு சதவிகிதம் உழைப்பைக் கொடுத்து லாபம் ஈட்டி வங்கிக்கு திருப்பிச் செலுத்துவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தேவைப்படும். நியாயமாக கடனை திரும்ப செலுத்த கூடியவர்கள் கூட தொழில் முடக்கம் காரணமாகவே கடனை திரும்ப செலுத்த முடியாமல் உள்ளனர். ஆனால் அவர்களுக்கும் அழுத்தம் தரும் வங்கிகளின் செயல்பாடு வருத்தமளிக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சரத்குமார்.

சொத்துக்களை முடக்குவோம்; பத்திரிகையில் வெளியிடுவோம் பிரகடனப்படுத்துவோம் என வங்கிகளிலிருந்து பெரும்பாலான தொழிலதிபர்களுக்கும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்படும் போது அவர்கள் மன உளைச்சலில் சிக்கித் தவிப்பதும் தவறான முடிவு எடுக்க தூண்டுவதையும் மத்திய அரசு உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தும் சரத்குமார்,

பொருளாதார ரீதியாக அரசு மக்களுக்கு உதவ வேண்டும் எனில் ஆறு மாதங்களுக்கு வங்கிகள் எவருக்கும் அழுத்தம் தராமல் சுதந்திரமாக தொழில் செய்ய வழிவகுப்பது அரசு உறுதி செய்ய வேண்டும். மருத்துவ நிபுணர்களின் கணிப்பு படி மூன்றாம் அலை வந்து மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் நிச்சயமாக மத்திய அரசு ஒரு வருடத்திற்கு வங்கிக் கடன்களை திரும்ப செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி யாருக்கும் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் சூழலில் ஒரு தொழிலதிபர் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி இருக்கிறார். 50 சதவிகிதம் ஊதியம் வழங்குகிறார் 50 பணியாளர்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குகிறார். நிறுவனத்தை நடத்த முடியாமல் தவிக்கிறார். இது ஒரு நிறுவனத்தின் நிலை மட்டுமல்ல இலட்சக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்துள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பணியாளர்கள் அவர்களது குடும்பங்களின் நிலையும் இதுதான். எனவே நிறுவனத்தில் சிரமங்களை குறைக்கும் தனிநபர் பொருளாதார சிரமங்களை குறைக்கவும் மத்திய அரசு நிச்சயமாக இந்த மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு வங்கிக் கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வேண்டும்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் 12 மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கவனத்திற்கு எடுத்துச் சென்று 2 காலாண்டு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்த கருத்தை வழிமொழிகிறேன். அதே சமயம் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடம் நேரடியாக தொடர்பு கொண்டு கூடுதல் அழுத்தம் கொடுத்து கால அவகாசம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.