×

2 குழந்தைகளுக்குத் தாயான பெண்ணின் மீது ஒருதலைக்காதல்: பட்ட பகலில் உயிரோடு தீ வைத்து எரித்த இளைஞர்!

இதனால் ஆத்திரமடைந்த சுந்தமூர்த்தி சலோமியாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். நெய்வேலி புதுநகர் 28-வது வட்டத்தை சேர்ந்தவர் விக்டர்ஜான். இவருக்கு சலோமியா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். விக்டர்ஜான் மேற்கு வங்காளத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வரும் நிலையில் சலோமியா வடலூரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். சலோமியா பஸ்ஸில் வேலைக்கு சென்று வரும் போது அவருக்கு தனியார் பஸ் கிளீனரான குமராட்சியை சேர்ந்த ரத்தினசபாபதி மகன் சுந்தரமூர்த்தி என்பவரின் நட்பு
 

இதனால் ஆத்திரமடைந்த சுந்தமூர்த்தி சலோமியாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

நெய்வேலி புதுநகர் 28-வது வட்டத்தை சேர்ந்தவர் விக்டர்ஜான். இவருக்கு சலோமியா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். விக்டர்ஜான் மேற்கு வங்காளத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வரும் நிலையில் சலோமியா வடலூரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். 

சலோமியா பஸ்ஸில் வேலைக்கு சென்று வரும் போது  அவருக்கு தனியார் பஸ் கிளீனரான குமராட்சியை சேர்ந்த ரத்தினசபாபதி மகன் சுந்தரமூர்த்தி என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. சலோமியா சுந்தரமூர்த்தியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால்  சுந்தரமூர்த்தி சலோமியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒருக்கட்டத்தில் சலோமியாவிடம் சுந்தரமூர்த்தி காதலை சொல்ல, அதிர்ந்து போன சலோமியா எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது என்று கூறி அவரை திட்டியதுடன் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தமூர்த்தி சலோமியாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை சலோமியா வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஆபிஸ் உள்ள  வணிக வளாகத்தில் முதல் தளத்தில் நடந்து சென்ற சலோமியா மீது சுந்தரமூர்த்தி பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.  இதை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் தீயை அணைத்து சலோமியாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே அங்கிருந்தவர்கள் சுந்தரமூர்த்தியை பிடித்து போலீசில்  ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த வடலூர் போலீசார் சுந்தரமூர்த்தியைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.