×

ஸ்கூட்டி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து; 2 இளம்பெண்கள் பரிதாப பலி!

தாம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி, ஏற்பட்ட கோர விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் இருந்து வேளச்சேரி செல்லும் பாதையின் ஸ்கூட்டியில் இரண்டு பெண்கள் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஸ்கூட்டிக்கு பின்னால் வந்த தடம் எண் 51 எம்.டி.சி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டி மீது மோதியிருக்கிறது. இந்த கோர விபத்தில் ஸ்கூட்டியில் சென்ற இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
 

தாம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி, ஏற்பட்ட கோர விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் இருந்து வேளச்சேரி செல்லும் பாதையின் ஸ்கூட்டியில் இரண்டு பெண்கள் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஸ்கூட்டிக்கு பின்னால் வந்த தடம் எண் 51 எம்.டி.சி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டி மீது மோதியிருக்கிறது. இந்த கோர விபத்தில் ஸ்கூட்டியில் சென்ற இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் எல்லாரும் பேருந்து ஓட்டுநரை பிடிக்க முயன்ற நிலையில், ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த பெண்களின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண்கள் யார்? என கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ரோஸ்லின்(20), கலைவாணி(19) என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சரண் அடைந்த ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.