×

விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

பாதாள சாக்கடையில் சுத்தம் செய்ய இறங்கிய இரண்டு பேர் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விஷவாயு தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்காக இயந்திரங்கள் அரசால் விநியோகிக்கப்பட்டாலும், இயந்திரமும் வாகனமும் செல்ல முடியாத இடங்களில் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் சூழல் நிலவுகிறது. இதில் பல உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு
 

பாதாள சாக்கடையில் சுத்தம் செய்ய இறங்கிய இரண்டு பேர் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விஷவாயு தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்காக இயந்திரங்கள் அரசால் விநியோகிக்கப்பட்டாலும், இயந்திரமும் வாகனமும் செல்ல முடியாத இடங்களில் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் சூழல் நிலவுகிறது. இதில் பல உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தனர். மயக்கமடைந்த வேல்முருகன் தர்மராஜ் ஆகியோரை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.