×

திருப்பத்தூர்-குட்டையில் விளையாடிய 2 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி

திருப்பத்தூர்- நாட்றம்பள்ளி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள நாயனசெருவு கிராமத்தில் வசிப்பவர் சண்முகம். அவரது 8 வயது மகள் ரேகாவும், அதே கிராமத்தின் மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மகள் ஜனனி (வயது 6) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள கரடி குட்டை ஏரி அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். பெற்றோர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, கவனக் குறைவால் கரடி
 

திருப்பத்தூர்- நாட்றம்பள்ளி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகள் நீரில் மூழ்கி பலி

அங்குள்ள நாயனசெருவு கிராமத்தில் வசிப்பவர் சண்முகம். அவரது 8 வயது மகள் ரேகாவும், அதே கிராமத்தின் மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மகள் ஜனனி (வயது 6) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள கரடி குட்டை ஏரி அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

குழந்தைகள் நீரில் மூழ்கி பலி


பெற்றோர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, கவனக் குறைவால் கரடி குட்டை ஏரியில் இறங்கி விளையாடியுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதுகுறித்து திம்மாம்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.