×

தமிழகம் முழுவதும் இன்று  17வது மெகா தடுப்பூசி முகாம் !!

 

தமிழகம் முழுவதும் இன்று 17 வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் உருமாறிய குரானா வைரஸ்  ஒமிக்ரான் ஆகியவை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில்  ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1525 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதுடன் தடுப்பூசி செலுத்தும் பணியையும் தமிழக அரசு துரிதமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் இன்று 17 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 16 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்த நிலையில், இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.  சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 87 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 57 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.

மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடைபெற்று வந்த நிலையில் புத்தாண்டு காரணமாக இன்று மாற்றப்பட்டு உள்ளது.  தொற்று பரவுவது  அதிகரித்து வருவதால் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை  பொதுமக்கள் விரைவாக செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.