×

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி விரட்டியத்த இலங்கை கடற்படை

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது அந்நாட்டு கடற்படையினர் பாட்டில் மற்றும் கற்களை கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை இலங்கை கடல் பகுதிக்குள் சென்றாக கூறி சுமார், 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி வலைகளை இலங்கை கடற்படை வெட்டிவிட்டனர். மேலும், மீனவர்கள் மீது கண்ணாடி பாட்டில்களையும், கற்களையும்
 

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது அந்நாட்டு கடற்படையினர் பாட்டில் மற்றும் கற்களை கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை இலங்கை கடல் பகுதிக்குள் சென்றாக கூறி சுமார், 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி வலைகளை இலங்கை கடற்படை வெட்டிவிட்டனர். மேலும், மீனவர்கள் மீது கண்ணாடி பாட்டில்களையும், கற்களையும் கொண்டு கொடூரத் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற மீனவரின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய ராமேஸ்வரம் மீனவர்கள், பாரம்பரியமான இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் சுமார் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி வலை வெட்டி வீசி எறியப்பட்ட நிலையில், அவர்கள் சென்ற பின் 30-க்கும் மேற்பட்ட வலைகளை மீட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் ஒவ்வொரு படகிற்கும் சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாரம்பரிய இடத்தில் மீன் பிடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.