×

16 வயது சிறுமி தற்கொலை…மகள் இறந்த சோகத்தில் தந்தையும் விஷம் குடித்து தற்கொலை!

தீயணைப்பு துறையினர் மகாலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் நொச்சியம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி . இவரது மகள் மகாலட்சுமி 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து தனியார் டியூசன் சென்டரில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் மகாலட்சுமி தனக்கு மூக்கு கண்ணாடி வேண்டும் என்று தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை பொன்னுசாமி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி தனது தாத்தா
 

தீயணைப்பு துறையினர் மகாலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பெரம்பலூர் நொச்சியம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி . இவரது மகள் மகாலட்சுமி 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து தனியார் டியூசன் சென்டரில் படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று மதியம் மகாலட்சுமி தனக்கு மூக்கு கண்ணாடி வேண்டும் என்று தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை பொன்னுசாமி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி தனது தாத்தா ராமன் என்பவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மகாலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து மகள் இறந்த சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத தந்தை பொன்னுசாமி வீட்டில் விஷம் குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.