×

இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாதவர்கள் எஸ்.பி.பிக்கு இன்று நடந்த சடங்கில் பங்கேற்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறுச்சடங்கில் பங்கேற்க முடியாத பலரும் இன்றைக்கு அவருக்கு நடந்த சடங்கில் பங்கேற்றனர். சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி. கடந்த 25ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி மறைந்தார். 26ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று அவரது உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்று பால் ஊற்றும் சடங்கு
 

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறுச்சடங்கில் பங்கேற்க முடியாத பலரும் இன்றைக்கு அவருக்கு நடந்த சடங்கில் பங்கேற்றனர்.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி. கடந்த 25ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி மறைந்தார். 26ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று அவரது உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்று பால் ஊற்றும் சடங்கு நடைபெற்றது. இன்று(4.10.2020) 10ஆம் நாள் சடங்கு நடைபெற்றது. கொரோனா சமூக இடைவெளி பிரச்சனை காரணமாக கடும் கட்டுப்பாடுகள் இருந்ததால், எஸ்.பி.பி. இறுதிச்சடங்கில் பலரும் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. இறுத்திச்சடங்கில் பங்கேற்அ முடியாத பலரும் 10ஆம் நாள் சடங்கில் பங்கேற்றனர்.

நாளை மற்றும் நாளை மறுதினமும் சடங்குகள் நடைபெற இருக்கின்றன. அந்த இரண்டு சடங்குகளும் மகாலிங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற இருக்கிறது.