×

12ம் வகுப்பு பொதுத்தேர்வு  - விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி!!

 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தலில் மாணவர்கள் பலருக்கு மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே ஐந்தாம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.  அதன்படி மாணவர்கள்  மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்காக கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர்.  பல மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று மதிப்பெண்களை சரி பார்த்தபோது அதில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.


இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தலில் மாணவர்கள் பலருக்கு மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற உண்மையான மதிப்பெண்களை காட்டிலும் குறைவான மதிப்பெண்களை கணக்கிட்டு ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்ற நிலையில் மதிப்பெண்களை முறையாக கணக்கிடாததால் பொறியியல் ,வேளாண் படிப்புகள், கால்நடை, மருத்துவ அறிவியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள்  என அனைத்திலும் மாணவர்களுக்கான உரிய இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதனால் தவறிழைத்த ஆசிரியர்கள் மீது உயரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில்  ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் என 80 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு , சம்பள உயர்வு உள்ளிட்டவை கட் செய்யப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.