×

தமிழகத்தில் ’12 ஐபிஎஸ்’ அதிகாரிகள் பணியிட மாற்றமும் பதவி உயர்வும்!

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். 12 பேரில் மூன்று பேருக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வும் 9 பேருக்கு பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறை டிஜிபியாக கரண் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே.விஸ்வநாதன்நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக வன்னியபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். 12 பேரில் மூன்று பேருக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வும் 9 பேருக்கு பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறை டிஜிபியாக கரண் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே.விஸ்வநாதன்நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக வன்னியபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபி ஆக ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக க சீமா அகர்வால், காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஜி. அமல்ராஜ் பதவி உயர்வு பெற்று ஆபரேஷன் கமாண்டோ படை பிரிவு ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐஜி சங்கர் ஏடிஜிபி ஆக பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறை தலைமையகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.