5000எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது
இந்தியாவில் 5000எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
மும்பை: இந்தியாவில் 5000எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய படைப்பான மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பெர்லினில் நடைப்பெற்ற IFA 2018 நிகழ்ச்சியில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
மோட்டோ ஒன் பவர் சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே
– குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா
– விரல்ரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் இதன் விலை ரூ.15,990 விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.