×

’ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்…அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்’…தடதடக்க வைக்கும் தடகள வீராங்கனை

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கி மீண்ட தடகள வீராங்கனை டூட்டி சந்த் தான் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்துவருவதாகவும் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் கூறி ஒட்டுமொத்த இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கி மீண்ட தடகள வீராங்கனை டூட்டி சந்த் தான் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்துவருவதாகவும் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் கூறி ஒட்டுமொத்த இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய
 

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கி மீண்ட தடகள வீராங்கனை டூட்டி சந்த் தான் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்துவருவதாகவும் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் கூறி ஒட்டுமொத்த இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கி மீண்ட தடகள வீராங்கனை டூட்டி சந்த் தான் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்துவருவதாகவும் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் கூறி ஒட்டுமொத்த இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஒடிசாவைச் சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த், சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கினார். அதாவது அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு விளையாட்டுக்கான கோர்ட்டில் அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.

 வட இந்திய இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த டூட்டி சந்த்,”கடந்த 5 ஆண்டுகளாக எனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் நட்பில் இருக்கிறேன். அந்த பெண் புவனேசுவரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் எனக்கு சொந்தக்காரர் தான். அவரது வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் நிறைய நேரத்தை செலவிடுவேன். அவர் தான் எனது உயிர் மூச்சு. எதிர்காலத்தில் அவரையே திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புகிறேன்

எனது வீட்டை மூத்த சகோதரி கவனித்து வருகிறார். வீட்டில் அவரது ஆதிக்கம் தான் எப்போதும் இருக்கும். தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக சகோதரனின் மனைவியை எனது அக்கா வீட்டை விட்டே விரட்டி விட்டவர் அவர். இப்போது அவர் என்னையும் குடும்பத்தில் சேர்க்கமாட்டேன், இங்கிருந்து போய் விடு என்று மிரட்டுகிறார். ஆனால் எனக்கு 18 வயது தாண்டி விட்டது. சட்டப்படி எனது வாழ்க்கையை தீர்மானிக்க எனக்கு முழு உரிமை உண்டு. அதனால் அந்த பெண்ணுடன் வாழப்போவதை வெளிப்படையாக சொல்கிறேன்.

எனது சகோதரி, நான் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை துணைக்கு எனது சொத்து மீது தான் ஆசை இருப்பதாக சொல்கிறார். அது மட்டுமின்றி இந்த உறவு நீடிக்கும் பட்சத்தில் என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டுகிறார். என்னை பொறுத்தவரை இறுதியாக அவருடன் இருக்கவே விரும்புகிறேன். தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே எனது லட்சியம். அதற்காகக் கடின பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இந்தத் தகவலை எனது வருங்கால துணையின் அனுமதியுடனேயே சொல்கிறேன்’என்று அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் டூட்டி சந்த்.