×

விராட் கோலி, மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது; மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை

விராட் கோலி மற்றும் மீராபாய் சானுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. டெல்லி: விராட் கோலி மற்றும் மீராபாய் சானுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும். இந்த
 

விராட் கோலி மற்றும் மீராபாய் சானுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

டெல்லி: விராட் கோலி மற்றும் மீராபாய் சானுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும். இந்த விருதுக்கான வீரர்களின் பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும்.

இதைத் தொடர்ந்து வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் விராட் கோலி, மீராபாய் சானு உட்பட பல வீரர்களின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.