×

மேற்கிந்திய தீவுகள் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா மற்றும் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல்
 

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்தியா மற்றும் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை துவக்கத்தில் நிதானமாக எதிர்கொண்டனர். சற்று அதிரடி காட்டிய கேஎல் ராகுல் அரைசதம் கண்டார். மறுமுனையில் நங்கூரம் போல் நிலைத்து ஆடி வந்த ரோகித் சர்மா 67 பந்துகளில் அரைசதம் கடந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது.

388 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி.  ஆட்ட முடிவில் 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்களை இழந்து வெறும் 280 ரன்கள் மட்டுமே மேற்கிந்திய அணி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.