×

பயோ பபுள் உள்ளேயும் நுழைந்த கொரோனா… சிஎஸ்கே ஆட்டம் ஒத்திவைப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. நாடே கதறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் முக்கியமா என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நாங்கள் தொடரை நடத்தியே தீருவோம் என ஒற்றைக் காலில் நிற்கிறது பிசிசிஐ. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் பலர் பிசிசிஐ விமர்சித்து வருகின்றனர். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் இருக்கிறார்கள். பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இதற்குள்ளேயே கொரோனா நுழைந்துவிட்டது. கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு
 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. நாடே கதறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் முக்கியமா என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நாங்கள் தொடரை நடத்தியே தீருவோம் என ஒற்றைக் காலில் நிற்கிறது பிசிசிஐ. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் பலர் பிசிசிஐ விமர்சித்து வருகின்றனர்.

தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் இருக்கிறார்கள். பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இதற்குள்ளேயே கொரோனா நுழைந்துவிட்டது. கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் நேற்று நடைபெறவிருந்த ஆர்சிபி-கொல்கத்தா போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே வீரர்கள் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தனர். இதனால் சிஎஸ்கே வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருடன் சிஇஓ காசி விஸ்வநாதனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலாஜியுடன் வீரர்கள் அனைவரும் தொடர்பில் இருந்ததால் அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் நாளை நடைபெறவிருந்த சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.