×

ஆஸிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: முரளி விஜய், கே.எல் ராகுல் அதிரடி நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளனர். மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் மற்றும்  கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் மற்றும்  கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை சமநிலையில் வைத்திருக்கின்றன.

இந்நிலையில், தொடரில் முன்னிலை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை நடைபெறுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 37 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே இந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி விழுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய்யும், கே.எல்.ராகுலும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர்களாக மயங் அகர்வால், அனுமான் விஹாரி களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உமேஷ் யாதவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்த்திக் பாண்டியா, ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.