×

LPL தொடரில் முதல் போட்டியே சூப்பர் ஓவர்! வென்றது கொழும்பா… கண்டியா?

இலங்கையில் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், எட்டாண்டுகளாக நடத்தப்படுகிறது. ஐந்து அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டி நேற்று நடந்தது. இதில் மோதிக்கொண்டது கண்டி vs கொழும்பு. இதில் முதல் ஆடிய கண்டி அணி அதிரடியாக 219 ரன்களை எடுத்தது. இந்த ரன்களை கொழும்பு அணியால் சேஸ் செய்வது சிரமம் என்று பலரும் கணித்த நிலையில் கொழும்பு அணியும் 20 ஓவர் முடிவில் 219 ரன்களை எடுத்தது
 

இலங்கையில் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், எட்டாண்டுகளாக நடத்தப்படுகிறது. ஐந்து அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்பட்டுள்ளது.

இந்த சீசனின் முதல் போட்டி நேற்று நடந்தது. இதில் மோதிக்கொண்டது கண்டி vs கொழும்பு. இதில் முதல் ஆடிய கண்டி அணி அதிரடியாக 219 ரன்களை எடுத்தது.

இந்த ரன்களை கொழும்பு அணியால் சேஸ் செய்வது சிரமம் என்று பலரும் கணித்த நிலையில் கொழும்பு அணியும் 20 ஓவர் முடிவில் 219 ரன்களை எடுத்தது ஆச்சர்யம். அதனால், எல்.பி.எல் சீசனின் முதல் போட்டியே சூப்பர் ஓவருக்குச் சென்றது.

சூப்பர் ஓவரின் கொழும்பு அணி 16 ரன்கள் எடுக்க, கண்டி அணியால் 12 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் எல்.பி.எல் தொடரின் முதல் வெற்றி கொழும்பு அணிக்கே. இதனால் பாயிண்ட் டேபிளில் 2 புள்ளிகளோடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்திய வீரர் இர்பான் பதான் பந்து வீசும்போது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். ஓவர் முடிவதற்குள் சிகிச்சை எடுக்க வேண்டியதாயிற்று.