சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூல் கேப்டன் ‘தோனி’ அறிவிப்பு
’தோனி எப்போ ரிட்டயர்மெண்ட்டை அறிவிக்கப்போறார்?’… ’இந்த மேட்ச்தான் தோனியின் கடைசி மேட்ச்’… ‘இன்னும் ஏன் ஓய்வை அறிவிக்காமல் இருக்கிறார்?’… இந்தியாவின் அதிரடி கிரிக்கெட் வீர மஹேந்திர சிங் தோனியின் ஓய்வை பற்றி, பலரும் பலவிதமாகப் பேசி வருகின்றனர். ஆனால், தோனி தனது ஓய்வு குறித்து இதுவரை அமைதிகாத்துவந்த தோனி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
View this post on Instagram
Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
A post shared by M S Dhoni (@mahi7781) on Aug 15, 2020 at 7:01am PDT
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் போட்டிக்காக தயார் ஆகி வருகின்றனர். அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.