×

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது!

 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனால்  இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனையடுத்து டி20 தொடரில் விளையாடவுள்ளது.