×

ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சஹார் ?

 

கடந்த ஐ.பி.எல். சீசனில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் சஹாரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் வாங்கியது. இந்நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் போது தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு தசைநார் கிழிந்து இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. 

இதனையடுத்து தீபக் சஹார் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில், காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தீபக் சஹார் காயத்தில் இருந்து மீள குறைந்தது 8 வாரங்களுக்கு மேல் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவர் பாதிக்கும் மேற்பட்ட ஐ.பி.எல் போட்டிகளை தவற விடலாம் என கூறப்படுகிறது.

காயம் குணமாக கூடுதல் அவகாசம் ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை அணியின் தொடர்க்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாடும் காயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிடதக்கது.