அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரரான கிரண் பொல்லார்டுக்கு இன்று பிறாந்தநாள்
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கிரண் பொல்லார்டு இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பொல்லார்டுக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளன. குறிப்பாக இந்தியாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன. ஐபிஎல் தொடரில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது முரட்டு தணமாக பேட்டிங், சாதூர்யமான பந்துவீச்சு, நகைச்சுவையான் செய்கை உள்ளிட்டவை ரசிகர்களை இவரது பக்கம் கவர்ந்திழுக்க செய்தது. ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசிய 3-வது வீரர் என்ற சாதனையை படைத்தவர் பொல்லார்டு.
இந்நிலையில் பொல்லார்டு இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி பொல்லார்டுக்கு விளையாட்டு வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது டுவிட்டர் பக்கத்தில் பொல்லார்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.