×

“நிவர் புயலால் பெரிய சேதம் இல்லை”- முதல்வர் பழனிசாமி பேச்சு!

தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன் முடிவில் மெரினா கடற்கரைக்கு அனுமதி, புறநகர் ரயில் சேவை உள்ளிட்டவை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, கடந்த 25ம் தேதி கரையைக் கடந்த நிவர் புயலால் பெரிய சேதம் இல்லை, அரசு மேற்கொண்ட அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் சேதம்
 

தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன் முடிவில் மெரினா கடற்கரைக்கு அனுமதி, புறநகர் ரயில் சேவை உள்ளிட்டவை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, கடந்த 25ம் தேதி கரையைக் கடந்த நிவர் புயலால் பெரிய சேதம் இல்லை, அரசு மேற்கொண்ட அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என்றும் வேளச்சேரி, தாம்பரம், வரதராஜபுரம் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படாமலிருக்க தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் வரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், தனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.