×

வேலூர் மணமக்களுக்கு வாழ்த்துமடல் அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி!

ராஜசேகரன் வீட்டிற்குப் புதுடெல்லியிலிருந்து பிரதமர் மோடி கையொப்பமிட்ட வாழ்த்து மடல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது வாலாஜாப்பேட்டை: பிரதமர் நரேந்திர மோடி வாலாஜாப்பேட்டை மணமக்களுக்குத் திருமண வாழ்த்துமடல் அனுப்பி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ ஆய்வாளர் ராஜசேகரன், பிரதமர் மோடிக்கு வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள தனது மகளின் திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்து நேரில் வந்து வாழ்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் ராஜசேகரன் வீட்டிற்குப் புதுடெல்லியிலிருந்து பிரதமர் மோடி கையொப்பமிட்ட வாழ்த்து
 

ராஜசேகரன் வீட்டிற்குப் புதுடெல்லியிலிருந்து பிரதமர் மோடி கையொப்பமிட்ட வாழ்த்து மடல் ஒன்று அனுப்பி  வைக்கப்பட்டது

வாலாஜாப்பேட்டை: பிரதமர் நரேந்திர மோடி வாலாஜாப்பேட்டை மணமக்களுக்குத் திருமண வாழ்த்துமடல் அனுப்பி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். 

ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ ஆய்வாளர் ராஜசேகரன், பிரதமர் மோடிக்கு வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள தனது மகளின் திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்து  நேரில் வந்து வாழ்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் ராஜசேகரன் வீட்டிற்குப் புதுடெல்லியிலிருந்து பிரதமர் மோடி கையொப்பமிட்ட வாழ்த்து மடல் ஒன்று அனுப்பி  வைக்கப்பட்டது. அதில்,  ‘உங்கள் மகளின் திருமணத்திற்குத் தன்னை அழைத்ததற்கு நன்றி. மணமக்களுக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர் மோடி கையொப்பமிட்ட திருமண வாழ்த்து மடல்  ராஜசேகரன் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அப்பகுதி வாசிகளுக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.