×

வேலூர் கே.வி.குப்பம் அருகே இருதரப்பினர் மோதல்: பெட்ரோல் குண்டு வீச்சு!

கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் : கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை, ஒருகட்டத்தில் இருதரப்பு பிரச்னையாக மாற அங்குத் தகராறு மூண்டதால் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து பனமடங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே கடந்த
 

கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

வேலூர் : கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை, ஒருகட்டத்தில் இருதரப்பு பிரச்னையாக மாற அங்குத் தகராறு மூண்டதால் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து  பனமடங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனிடையே கடந்த 28-ம் தேதி இரவு சின்ன வடுங்கன்தாங்கள் வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் சென்றவர்களைத் தாக்கி அவர்களது வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதாக  போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில்,  கீழ்முட்டுகூர் கிராமத்தைச் சேர்ந்த தரணி, லலித்குமார், கோபி, விஷ்ணு, சக்திவேல் என இரண்டு தரப்பு ஆட்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையடுத்து இந்த பிரச்னை முன்விரோதம் காரணமாக மீண்டும் நீடித்து கீழ்மூட்டுகூர் கிராமத்தில் உள்ள சம்பத் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டிலிருந்த அவரது கர்ப்பிணி மனைவி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு 50ற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பனமடங்கி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.