×

வேடசந்தூர் காசிவிஸ்வநாதர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

வேடசந்தூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி நேற்று 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் பழமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி நேற்று 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. அதனையடுத்து மூலவர் காசிவிஸ்வநாதருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மூலவருக்கு மகா தீபாராதனை
 

வேடசந்தூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி நேற்று 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் பழமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி நேற்று 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

அதனையடுத்து மூலவர் காசிவிஸ்வநாதருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மூலவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் கோயிலில் உள்ள விநாயகர், நவக்கிரகம், கால பைரவர், சுப்பிரமணியர், விசாலாட்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த ஆன்மீக நிகழ்வில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.