×

விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

கொரோனாவில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கொரோனாவில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தினக்கூலிக்கு வேலை செய்பவர்களும்,விவசாயிகளும் விளைய வைத்த பயிர்களை என்ன செய்வதென்று அறியாது திணறி வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால், விவசாயிகள் விளைய வைத்த பொருட்களை மார்கெட்டுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்
 

கொரோனாவில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கொரோனாவில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தினக்கூலிக்கு வேலை செய்பவர்களும்,விவசாயிகளும் விளைய வைத்த பயிர்களை என்ன செய்வதென்று அறியாது திணறி வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால், விவசாயிகள் விளைய வைத்த பொருட்களை மார்கெட்டுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஊரடங்கால் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் உதவி போன்றவற்றை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்