×

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டதாகவும், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியே கடைசி நாள் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவின. இந்நிலையில் வருமான வரி கணக்கைத் தாக்கல்
 

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 

சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டதாகவும், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியே கடைசி நாள் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவின. 

இந்நிலையில் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு கிடையாது என்று வருமான வரித்துறை மீண்டும் தெளிவுபடக் கூறியுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யக் காலக்கெடு நீட்டிப்பு என்று பரவும் தகவல் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளது.