லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி திடீர் உயிரிழப்பு!
இதையடுத்து புகாரின் அடிப்படையில் ஜெயந்தி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கே.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் ஜெயந்தி ராணி. இவர் வீட்டுமனை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து புகாரின் அடிப்படையில் ஜெயந்தி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜெயந்தி ராணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவர் நெஞ்சுவலி காரணமாக திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரழிந்தார். இச்சம்பவம்அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.