×

முதிய தம்பதியினரைத் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர் கைது….

தமிழக அரசு முதியவர்களின் தைரியத்தைப் பாராட்டி அவர்களுக்குப் பரிசு அளித்தது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே சண்முகவேல், செந்தாமரை தம்பதியினரை வீட்டின் பின்புறத்திலிருந்து வந்த 2 கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கி, வீட்டில் கொள்ளையடிக்க முயன்றனர். கொள்ளையர்களைக் கண்டு பயப்படாமல் அந்த தம்பதியினர் இருவரும் அருகே இருந்த நாற்காலியை வைத்து கொள்ளையர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணைய தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வைரல் ஆகியது. அதனையடுத்து, தமிழக அரசு முதியவர்களின் தைரியத்தைப் பாராட்டி அவர்களுக்குப்
 

தமிழக அரசு முதியவர்களின் தைரியத்தைப் பாராட்டி அவர்களுக்குப் பரிசு அளித்தது. 

நெல்லை மாவட்டம் கடையம் அருகே சண்முகவேல், செந்தாமரை தம்பதியினரை வீட்டின் பின்புறத்திலிருந்து வந்த 2 கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கி, வீட்டில் கொள்ளையடிக்க முயன்றனர். கொள்ளையர்களைக் கண்டு பயப்படாமல் அந்த தம்பதியினர் இருவரும் அருகே இருந்த நாற்காலியை வைத்து கொள்ளையர்களை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணைய தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வைரல் ஆகியது. அதனையடுத்து, தமிழக அரசு முதியவர்களின் தைரியத்தைப் பாராட்டி அவர்களுக்குப் பரிசு அளித்தது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில்,  கொள்ளையடிக்க வந்த இருவரில் ஒருவரைக் கண்டு பிடித்து விட்டதாக காவல்துறை தரப்பினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், அந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் பழைய குற்றவாளி என்றும் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.