×

முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிச்சென்ற ஊழியர்!! ஒரு வேள போனஸ் கொடுக்கலையோ?

வேளச்சேரியில் முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரியில் முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜபுரம் பகுதியில் வசித்துவருபவர்கள் போஸ் – பாக்கியம் தம்பதியினர். போஸ் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் மணி என்பவர் வேலை பார்த்துவந்தார். அவரும் அதே பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மணிக்கும், அப்பகுதியை சேர்ந்த மதுரை மணி என்பவருக்கும்
 

வேளச்சேரியில் முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேளச்சேரியில் முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காமராஜபுரம் பகுதியில் வசித்துவருபவர்கள் போஸ் – பாக்கியம் தம்பதியினர். போஸ் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் மணி என்பவர் வேலை பார்த்துவந்தார். அவரும் அதே பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மணிக்கும், அப்பகுதியை சேர்ந்த மதுரை மணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் போஸ் மணியை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.

போஸ் தனக்கு சாதகமாக பேசாததால் அத்திரமடைந்த மணி இன்று அதிகாலை போஸின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனால் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் இதுகுறித்து கிண்டி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மணியை  தேடிவருகின்றனர்.