×

முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்ற மருந்தகம்: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

பதுக்கிவைத்திருந்த ஏராளமான முகக்கவசங்களை பறிமுதல் செய்ததுடன் கடைக்கு சீல் வைத்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம், சானிடைசர் வாங்க கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இருப்பினும் பல இடங்களில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தை பயன்படுத்தி முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கொடுமையும் அரங்கேறி வருகிறது. இவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரர்
 

பதுக்கிவைத்திருந்த ஏராளமான முகக்கவசங்களை பறிமுதல் செய்ததுடன் கடைக்கு சீல் வைத்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம், சானிடைசர் வாங்க கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இருப்பினும் பல இடங்களில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தை பயன்படுத்தி   முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை  அதிக விலைக்கு விற்பனை செய்யும் கொடுமையும் அரங்கேறி வருகிறது. இவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், சென்னை ஓமந்தூரர் மருத்துவமனைக்கு எதிரே உள்ள மருந்து கடை ஒன்றில் மருத்துவ உபகரணங்களை  அதிக விலைக்கு விற்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பதுக்கிவைத்திருந்த ஏராளமான முகக்கவசங்களை பறிமுதல் செய்ததுடன் கடைக்கு சீல் வைத்தனர்.

 மருத்துவ உபகரணங்கள் பதுக்கி வைப்பது அல்லது அதிக விலைக்கு விற்பது போன்றவை தெரியவந்தால் 104 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.