×

மிகுந்த வேதனை அடைந்தேன்… சசிகலா ஆடியோ

அதிமுக அவை தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு தியாகதலைவி சின்னம்மா அவர்களின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். 14 வயது முதலே பொது வாழ்வில் அடியெடுத்து வைத்த திரு மதுசூதனன், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் போற்றும் தலைவராகத் திகழ்ந்த அவர், கைத்தறித் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் மதுசூதனன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோவில், “திரு மதுசூதனன் அவர்களின் மறைவு அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு,
 

அதிமுக அவை தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு தியாகதலைவி சின்னம்மா அவர்களின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். 14 வயது முதலே பொது வாழ்வில் அடியெடுத்து வைத்த திரு மதுசூதனன், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் போற்றும் தலைவராகத் திகழ்ந்த அவர், கைத்தறித் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் மதுசூதனன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோவில், “திரு மதுசூதனன் அவர்களின் மறைவு அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, எத்தனையோ சோதனையான காலத்திலும் துணை நின்றவர். தலைவரிடத்திலும், அம்மாவிடத்திலும் மிகுந்த பாசம் கொண்டவர். தலைவர் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அம்மாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும், 2007 ஆம் ஆண்டு முதல் அவை தலைவராக இருந்தபோதிலும் தன்னை ஒரு எளிய தொண்டனாகவே வாழ்ந்து காட்டியவர். திரு மதுசூதனைன் மறைவு செய்தி கேட்டு துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.