×

மருந்துக்களில் கலப்படம்…  அலட்சியப்படுத்தும் மருத்துவமனைகள்!

கடந்த மாதம், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரையை சக்தி என்பவர் உடைத்து சாப்பிட முயன்ற போது அதில் சிறிய கம்பி இருந்ததாக தெரிய வந்தது. சாதாரண மக்கள் அரசு மருத்துவமனையையே நாட வேண்டிய நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. அலட்சியமாக வேலை செய்யும் ஒரு சிலரால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடம் அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இன்றும், கோவையில் உள்ள மெடிக்கலில் அப்பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவர் பல்வலிக்காக
 

கடந்த மாதம், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரையை சக்தி என்பவர்  உடைத்து சாப்பிட முயன்ற போது அதில் சிறிய கம்பி இருந்ததாக தெரிய வந்தது. சாதாரண மக்கள் அரசு மருத்துவமனையையே நாட வேண்டிய நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. அலட்சியமாக வேலை செய்யும் ஒரு சிலரால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடம் அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இதனை  தொடர்ந்து இன்றும், கோவையில் உள்ள மெடிக்கலில் அப்பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவர் பல்வலிக்காக மாத்திரை வாங்க சென்றுள்ளர். அந்த மாத்திரையை பிரித்ததும் அதில் ஒரு கம்பி இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.